ஊதியமாற்றங்கள் ஒரு முன்னோட்டம் :
BSNL ஊழியர்களின் மூன்றாவது ஊதிய திருத்தம் மிகவும் முக்கியமானது ஏனெனில் பெரும்பான்மையோர் சந்திக்கப் போகும் கடைசி ஊதிய மாற்றம் இதுவே.
01.10.2000 அன்று நமது இலாகா பொதுத்துறை நிறுவனமாக அடி எடுத்து வைத்த பொழுது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் மட்டுமே ஊதிய திருத்தம் சம்பந்தமாக நிர்வாகத்துடன் பேச முடியும் என்று சொன்னது. அதனால் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு நாங்கள் ஒன்றுபட்டு வந்து பேசினால் உங்களுக்கு ஆட்சேபனையில்லையே என்று நிர்வாகத்தை சம்மதிக்க வைத்து தோழர் குப்தா தனது பெருந்தன்மையான அணுகுமுறையால் அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய ஊதியக் குழுவை அமைத்து 01.10.2000 முதல் ஒரு சிறப்பான ஊதிய மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி ஊதிய உடன்பாட்டிலும் தோழர் நம்பூதிரியையே முதல் கையெழுத்திட வைத்து ஒரு சிறப்பான ஊதியமாற்றத்தை எற்படுத்தித்தந்தார்.
அடுத்ததாக 01.01.2007 முதலான இரண்டாவது ஊதிய மாற்றம் என்பது BSNLEU சங்கத்தின் ஏகபோக அணுகுமுறையால் சவலைப்பிள்ளையாக அமைந்தது. அங்கீகரிக்கப்பட்ட சங்கம் நாங்கள் மட்டுமே நிர்வாகத்துடன் பேசுவோம் உங்களது பரிந்துரைகளை எங்களிடம் கொடுங்கள் என பெரியண்ணன் மனப்பான்மையோடு செயலாற்றியது.
BSNL ஊழியர்களின் மூன்றாவது ஊதிய திருத்தம் மிகவும் முக்கியமானது ஏனெனில் பெரும்பான்மையோர் சந்திக்கப் போகும் கடைசி ஊதிய மாற்றம் இதுவே.
01.10.2000 அன்று நமது இலாகா பொதுத்துறை நிறுவனமாக அடி எடுத்து வைத்த பொழுது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் மட்டுமே ஊதிய திருத்தம் சம்பந்தமாக நிர்வாகத்துடன் பேச முடியும் என்று சொன்னது. அதனால் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு நாங்கள் ஒன்றுபட்டு வந்து பேசினால் உங்களுக்கு ஆட்சேபனையில்லையே என்று நிர்வாகத்தை சம்மதிக்க வைத்து தோழர் குப்தா தனது பெருந்தன்மையான அணுகுமுறையால் அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய ஊதியக் குழுவை அமைத்து 01.10.2000 முதல் ஒரு சிறப்பான ஊதிய மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி ஊதிய உடன்பாட்டிலும் தோழர் நம்பூதிரியையே முதல் கையெழுத்திட வைத்து ஒரு சிறப்பான ஊதியமாற்றத்தை எற்படுத்தித்தந்தார்.
அடுத்ததாக 01.01.2007 முதலான இரண்டாவது ஊதிய மாற்றம் என்பது BSNLEU சங்கத்தின் ஏகபோக அணுகுமுறையால் சவலைப்பிள்ளையாக அமைந்தது. அங்கீகரிக்கப்பட்ட சங்கம் நாங்கள் மட்டுமே நிர்வாகத்துடன் பேசுவோம் உங்களது பரிந்துரைகளை எங்களிடம் கொடுங்கள் என பெரியண்ணன் மனப்பான்மையோடு செயலாற்றியது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் பெற்றுத்தருவோம் இது தங்களது கோரிக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த பொதுத்துறை ஊழியர்களின் எண்ணமும் அதுவே என்றனர். அதிகாரிகள் ஒப்பந்தம் முடிந்ததும் அதன் அடிப்படையில் நமது பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என்றனர். இவ்வாறாக பல்வேறு காரணங்களைக் கூறி ஊதியமாற்றம் பெறுவதை தள்ளிப்போட்டு வந்தது நம்பூதிரிச்சங்கம். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நிர்வாகம் கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் நம்பூதிரிச் சங்கத்தை கையெழுத்திட வைத்தது.
அதிகாரிகள் ஊதியமாற்றம் பெற்றபோது 68.8 சதவிகிதமே பஞ்சப்படி உயர்ந்திருந்தது அதனால் அதிகாரிகள் 68.8 சத பஞ்சப்படி இணைப்புடன் ஊதியமாற்றம் பெற்றனர் ஆனால் நமது ஒப்பந்தம் கையெழுத்தான போது பஞ்சப்படி 78.2 சதத்தை எட்டியிருந்தது. நிர்வாகம் அதிகாரிகளுக்கு உயர்த்திக் கொடுக்கும் போது உங்களுக்கும் உயர்த்திக்கொடுக்கப்படும் என்று கூறியதின் அடிப்படையில் அறைகுறையான உடன்பாட்டால் 9.8 சதம் குறைவான ஊதிய நிர்ணயத்தையே ஊழியர்கள் பெற்றார்கள். ( உயர்ஊதியம் பெற்றுத்தந்தோம் அதுவும் லட்சக்கணக்கில் நிலுவைத்தொகையுடன் பெற்றுத்தந்தோம் என சாதனை தம்பட்டம் அடித்தது தனிக்கதை ) நிர்வாகமும் 78.2 சத பஞ்சப்படி இணைப்பை ஊழியர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வந்தது. நமது சங்கத்தின் கடுமையான முயற்சிகளுக்குப் பின்பே 78.2 ஊதிய நிர்ணயத்தை ஊழியர்கள் பெற்றார்கள் அதன் பின்பும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அந்த நிர்ணயம் பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு NFTE மற்றும் AIBSNLPWA சங்கங்கள் எடுத்து வைத்த வாதங்களின் அடிப்படையில் 78.2 ஊதிய நிர்ணயத்தை ஓய்வூதியர்கள் பெற்றனர். ஓய்வூதியர்களின் 78.2 ஊதிய நிர்ணயப் போராட்டம் BSNL நிறுவனத்தின் மீது DOT ஏற்றி வைத்த 60:40 பென்சன் பங்களிப்பு எனும் சுமையையும் இறக்கி வைத்தது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஏழாவது ஊதியக்குழு :
மத்திய அரசு ஊழியர்களின் 01.01.2016 முதலான ஊதிய திருத்தத்திற்காக திரு.A.K..மாதுர் அவர்களின் தலைமையில் 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது . ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள்தான் அதிகாரிகளின் ஊதியமாற்றத்திற்கும் நமது ஊதியமாற்றத்திற்கும் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியமாற்றமும் அமுலாகிவிட்டது. அதுமட்டுமின்றி ஏழாவது ஊதியக்குழுவின் ஓய்வூதியர் சம்பந்தமான பரிந்துரைகள் நமது துறை ஊழியர்களுக்கும் அமுல்படுத்தப்பட்டு BSNL ஓய்வூதியர்களும் பயன் பெற்று விட்டனர்.--------------------------------------------------------------------------------------------------------------------------
பொதுத்துறை அதிகாரிகள் ஊதிய மாற்றம் :
பொதுத்துறை அதிகாரிகளின் ஊதிய மாற்றத்திற்காக நீதியரசர் சதிஸ்சந்திரா அவர்களது தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவும் தனது அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதிகாரிகள் ஊதிய மாற்றம் சிறப்பாக அமைந்தால்தான் நமது ஊதிய மாற்றமும் சிறப்பாக அமையும். எனெனில் இரண்டாவது ஊதிய மாற்றத்தின் போது IOC , ONCG போன்ற லாபம் அதிகம் சம்பாதிக்கும் பொதுத்துறை அதிகாரிகள் தங்களுக்கு 40% அளவிற்கு ஊதிய நிர்ணயம் வேண்டி தனது போராட்டத்தை நடத்தி சிறைக்கும் சென்றனர். அவர்களின் போராட்டத்தின் எழுச்சியாக மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அனவருக்கும் பொதுவாக 30% ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதி வழங்கினார்.
நீதிபதி சதிஸ்சந்திரா குழு அறிக்கை :
No comments:
Post a Comment